Saturday, July 31, 2010

எந்திரன் டிரைலர் ....

http://www.youtube.com/watch?v=gwTu8A94e5o

http://www.youtube.com/watch?v=44dcXY5zXWw

http://www.youtube.com/watch?v=2TUR9eZsZao

http://www.youtube.com/watch?v=9xqquNSdEfk

Sunday, July 25, 2010

எந்திரன் - முதல் promo...

ஒருவழியாக எந்திரன் பற்றிய அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவர தொடங்கிவிட்டது ... அதன் முதல் கட்டமாக think music சார்பாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது ... இதோ அது உங்கள் பார்வைக்கு....

Friday, July 23, 2010

எந்திரன் பாடல் வெளியீடு ...

எந்திரன் பாடல் வெளியீடு வரும் 31ஆம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது என்பது அனைவருக்கும் அறிந்த விஷயமே அது குறித்து அதிகாரபூர்வமான விளம்பரம் மலேசியாவில் வெளியிடப்பட்டுள்ளது .... இதோ அந்த புதிய புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் உங்கள் பார்வைக்கு....














Monday, July 5, 2010

களவானி - திரைப்பட விமர்சனம் ...

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு கிராமத்துக் கதை ஆனால் இதில் மதுரை கிடையாது ,அரிவாள் இருந்தும் ரத்த வாடை கிடையாது , இரண்டு கிராமங்கள் இடையே சண்டை இருந்தும் அரிவாள் சண்டை கிடையாது ,அழுக்கான முகங்கள் கிடையாது , இவை அனைத்துமே படத்தின் plus பாயிண்ட் என்றே சொல்லலாம் ...

ஒரத்தநாடு பக்கம் tutorial காலேஜில் +2 படித்துக்கொண்டு ஊரை சுற்றி களவானி தனம் செய்யும் வாலிபனாக வரும் விமல் நன்றாக நடிப்பில் மெருகேறி உள்ளார் ,+1 படிக்கும் மாணவியாக வரும் ஓவியா அழகாக உள்ளார் ,மற்ற படங்களை போல் உப்புக்கு சப்பாக இல்லாமல் இதில் கதாநாயகி கதாபாத்திரத்துக்கு நடிக்கவும்
நல்ல வாய்ப்பு உள்ளது அதை ஓவியா சரியாக பயன் படுதிக்கொன்டுள்ளார் , விமலின் பெற்றோராக வரும் சரண்யா , இளவரசுவும் கதாபாத்திரமாகவே வாழ்துள்ளனர் ,
படத்தின் முக்கிய தூண்கள் என்று கூற வேண்டும் எனில் அது கஞ்சா கருப்பு மற்றும் புது முகமாக வந்துள்ள வில்லன் திருமுருகன் ஆகியோர்தான் .

முதல் பாதியில் கூறப்படும் " அறிக்கி LC112 கூட்டு " என்பதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் இருந்தும் பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பை வைத்து செய்யும் அனைத்து கலாட்டாக்களும் வயிற்றை பதம் பார்க்கிறது .சில இடங்களில் பருத்திவீரன் போன்ற காட்சிகள் வருவதை திரைக்கதையில் தவித்திருக்கலாம் .. மேலும் படம் நெடுக இது
காமெடி படமா ஆக்க்ஷன் படமா என்ற குழப்பம் தெரிகிறது .

பல நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் அழகாக ஒரு கிராமத்தை காட்டி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் பச்சை பசேல் என்று தஞ்சை சுற்றுவட்டாரத்தின்
அழகை படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் ,
இசை : இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் .

திரைக்கதையில் இன்னும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் இது ஒரு காவியமாக அமைந்திருக்கலாம் . இருப்பினும் மனதை களவாடுகிறான் இந்த களவானி என்று தான் சொல்லவேண்டும் .

ஒரு வரி : குழுவினருக்கு "நீங்க வேணும்னா பாருங்க இவன் டாப் ல போக தான் போறான் "...

இப்படிக்கு ,
கெளதம் ...

Friday, June 25, 2010

ரஜினி ஒரு ஜாக் நிக்கல்சன் ...

எந்திரன் சவுண்ட் எடிட்டர் ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டி Times of India நாளிதழுக்கு இன்று அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கம் இதோ உங்கள் பார்வைக்கு...

"ஒரு கட்டிடத்தில் இருந்து வேகமாக கொத்தாக வெளியேறும் மக்களின் அலறலை தனது அசிஸ்ட்டெண்ட்டுகளுடன் சவுண்ட் கேப்ட்சர் செய்கிறார். ரிசல்ட் அவருக்கு திருப்தியாக இல்லை. “உங்கள் அலறல் இன்னும் தத்ரூபமாக இருக்க வேண்டும், ஒன்றிணைந்து இருக்கவேண்டும்” என்று அவர்களை கேட்டுக்கொள்கிறார். திரும்பவும் Sound Capturing நடக்கிறது. இம்முறை அவருக்கு திருப்தி.

‘எந்திரன்’ படத்தில் இது ஒரு முக்கியமான காட்சி. நேற்றைக்கு நெருப்பில் சண்டையிடும் காட்சி ஒன்றை ஷூட் செய்து capture செய்தோம்.

ஆஸ்கார் விருதை வென்ற பின்பு அநேகமாக ரசூல் பணிபுரியும் படம் இதுவாகத் தான் இருக்கும். “கதை எதிர்காலத்தில் நடப்பது போல இருந்தாலும், யதார்த்தமாகவும் நம்பும்படியாகவும் இருக்கும். சென்னை புறநகரில் துவங்கும் எந்திரன் கதை படம் பிறகு கற்பனைக்கு எட்டாத இடத்திற்கு பயணிக்கும். லாஜிக் குறைப்பாடுகள் படத்தில் அறவே இல்லை எனலாம். சவுண்ட் எஃபக்ட்டுகளை பொறுத்தவரை EXPLORE செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது.

இசைப்புயல் ரஹ்மான் இதையெல்லாம் தான் இசையில் எப்படி கொண்டுவருகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.

எந்திரனைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப் பெரிய படங்களுள் ஒன்று என்று கூறலாம். எந்திரனின் கதையும் களமும் தான் புதிதே தவிர, படம் அக்மார்க் தமிழ் படம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரஜினி சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். பேட்மேன் படத்தில், ‘ஜோக்கர்’ என்னும் குரூர வில்லன் பாத்திரத்தில் ஜாக் நிக்கல்சனை பார்ப்பது போல இருக்கும் எந்திரனில் ரஜினியை பார்ப்பது."


இவ்வாறு அவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்...